தீருமோ
என் உதிரதாகம்? -2
பாவ்யா, கௌரி இருவரும் மும்பையில் புகழ் பெற்ற ஆடையலங்கார
கல்லூரி ஒன்றில் பயின்று வருகின்றனர்.. உயிர்த் தோழிகள் இருவரும் படிப்பின் இறுதி
வருடத்தை அடைந்து விட்டதனால் கெளரியின் ஆசைக்கு இணங்கி, கௌரியின் வீட்டிற்கு வருகைபுரிந்திருந்தாள்
பாவ்யா. இவ்வாறான அழகிய நட்பிற்குத் திருஷ்டி பொட்டு வைத்தது போல ஒரே ஒரு சிறு குறைவும்
உண்டு.. அது கெளரியின் தாழ்வு மனப்பான்மை.. தன்னை மீறி பாவ்யாவிடம் யாராவது கொஞ்சி
பேசினால் கோபம் கொள்வாள்.. தன்னிடம் எவரும் பேசவில்லை என்ற பொறாமையா??
இல்லை பாவ்யா தன்னை விட்டு தூரம் சென்று விடுவாளோ என்ற பயமா??
என்பதற்கான முடிவு ஆராய்ச்சியில்கூட கிட்டாதது.
கல்லூரியிலும் அடிக்கடி ஏதாவது ஒரு மாணவன் பாவ்யாவிடம் காதலைத்
தெரிவிப்பதும், அதன்பொருட்டு கெளரி அவளிடம் இரண்டு நாட்களுக்கு பேசாமல் செல்வதும்
வாடிக்கையான ஒன்று.. ஆனாலும் பாவ்யா கௌரியை விட்டு விடுவதும் இல்லை..
விட்டுக்கொடுப்பதுமில்லை.. அவளைப் பொருத்தவரை முதலிடம் என்றும் கௌரிக்கு தான்.
இந்தியாவின் ஒரு மத்தியிலிருந்து மற்றொரு பெருநகரத்திற்கு அனுப்புவதில் பாவ்யாவின் பெற்றோர்களுக்குமே உடன்பாடு இல்லை.. பாவ்யா கெளரிக்காக கெஞ்சிக் கேட்டதினாலும் அவளின் குடும்ப பின்னணிகளை விசாரித்து விட்டதினாலும் அனுப்பி வைத்துள்ளனர்..
முன்னால் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் மனம்
லயிக்காமல் போகவே, சுற்றும் முற்றும் விழிகளைச் சுழல விட்டு வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினையும்
அளவெடுத்து கொண்டிருந்தாள் பாவ்யா..அப்போது அவளது கழுத்தின் அருகே ஏதோ ஊர்வது
போலத் தோன்ற, கைவைத்துப்
பார்த்தால் எதுவும் இல்லை. கால்களில் பூரான் ஊர்வது போலத் தோன்ற, கீழே குனிந்து
பார்த்தவளுக்கு அதிர்ச்சி!! சதையும் தோலும் இன்றி எலும்பு மட்டுமே கொண்ட கைகள் சோபாவின்
உள்ளே நகர்ந்தது.
தேநீர் தயாரிப்பதற்காக மாலா சமையலறைக்குச் சென்றிருக்க, கௌரியும் ஏதோ ஒரு வேலைக்காக வேறு அறைக்குச்
சென்றிருந்தாள். குரலை உயர்த்தி இருவரில் யாரையாவது துணைக்கு அழைக்கலாம் என
எத்தனித்தவளது நாவானது பயத்தில் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது.
பயத்தில் உறைந்து இருந்தவளது கேசத்தில் விழுந்த ஈரம் சிரசு
முழுவதும் ஊர்ந்து, அவளுக்கு உணர்ச்சியைத் தோற்றுவிக்க, பதட்டத்தில் தொட்டுப் பார்த்தாள் பாவ்யா.
அதில் குருதி பிசுபிசுக்க, உச்சக்கட்ட அதிர்ச்சியில் படபடவென துடிக்கும் கண்களோடும் இதயத்தோடும்
மேலே நிமிர்ந்து பார்க்க, "வே........" என அலறலோடு மேலே இருந்து ஒரு உருவம் தலைகீழாக
பாய்ந்து வந்தது.
"ஆ....ஆ...." என அவள் அலறத் தொடங்க, அவளது அலறலைக் கேட்டு வெளியே ஓடி வந்த மாலா;
சோபாவின் ஒரு ஓரத்தில் உடலைக் குறுக்கிக்கொண்டு, முகத்தை
மூடியவாறே நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்த பாவ்யாவைக் கண்ணுற்றார்.
மாலா கண்களைப் பக்கவாட்டில் நகர்த்த, அவளருகே இரண்டு
குட்டிச் சாத்தான்கள் ஆபத்தான பற்களோடு சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இரண்டு சாத்தான்களையும் இரண்டு சாத்து சாத்தியவர்; பாவ்யாவின் கைகளைத் தொட, அதில் வீறிட்டுக் கத்தியவளை சமாதானம்
செய்யும் பொருட்டு, “நான் தான்...” என்றார்.
சற்றே பதற்றத்துடன், “மா...” என அவள் தட்டுத் தடுமாறி கண்களைத்
திறக்க, மாலா பக்கவாட்டை நோக்குமாறு சமிக்ஞை காட்டினார்.
அவர் சுட்டிய திசையைப் பார்த்ததும், பயம் நீங்கி கைகளையும்
கால்களையும் இயல்பாய் தரையில் பதித்தவள்; அருகிலிருந்த கௌரியைச் செல்லமாய் அடித்துவிட்டு, கட்டிக்கொண்டாள்.
"பயந்துட்டியா??" எனக் கௌரி கேட்க, "ம்ம்..." என மெலிதாக தலையசைத்தாள். "பின்ன.. இந்த
மானா மதுரை மகேஷ் பிளானாச்சே..." என சட்டை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவனை
யாரென பாவ்யா உறுத்து விழிக்க,
"என் தம்பி... மகேஷ்.. மேக்கப்
ஆர்ட்டிஸ்ட்.. சொல்லியிருக்கிறேனே" என விளக்கமளித்தாள் கௌரி.
"பாவ்ஸ்.. என்ன?? அங்கேயே பேயறஞ்ச மாதிரி பாக்குற??" என மகி
கேட்டும் பதிலளிக்காமல் அத்திசையை வெறித்து
கொண்டிருந்தவளை உலுக்க, "ஹான்.. ஒன்னும் இல்ல..
சும்மா பார்த்தேன்..." என சமாளித்து வைத்தாள். தான் கண்களால் கண்ட காட்சியை அவளாலேயே
நம்ப முடியாமல் இருக்க எப்படி வெளியே கூறுவாள்??
அங்கே எதுவும் இல்லாமல் இருக்கவே,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள். அந்த
கருநிற புகைபோன்ற உருவம் அவளது கழுத்தை நோக்கி நீண்ட நகங்களை தாங்கிய கரங்களைக்
கொண்டு செல்ல, மின்னல்
அடித்தது போன்று உணர்வில் தூக்கி எறியப்பட்டது. விழுந்த மறுநொடியே உதறிக்கொண்டு
எழுந்து மீண்டும் அவளது கழுத்தை நெரிக்க முயல, ஒவ்வொருமுறையும் மின்னல் அடித்தது போல் தூக்கி
எறியப்பட்டது.
"...."
"நம்ம ஸ்டேஷன்ல தான் இருக்கிறேன்.."
"...."
" எங்க???"
"...."
"அப்பவே பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டியா?!"
"...."
"சரி..கோபப்படாதே தங்கம்.. நீ வெயிட் பண்ணிட்டு
இரு..."
"...."
"இப்ப பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன் தங்கம்...
பிராமிஸ்.." என இணைப்பைத் துண்டித்துவிட்டு, வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அலைபேசியை பின்னால் நீட்டி, "உன் அண்ணன் தான்.. பேசு..." என்று விட்டு வண்டியை
நகர்த்த,
பின்னால் அமர்ந்து அலைபேசியில் அங்கே நடப்பவற்றை தன்
சகோதரனுக்கு நேரலையில் விளக்கிக் கொண்டிருந்தாள் தங்கம்.
கீழே விழுந்த கைக்குட்டை மெல்லக் காற்றில் உருண்டு,
காட்டிற்குள் சென்றது. உள்ளே ஆக்ரோஷமாய் அலறிக்கொண்டிருந்த உருவம் தன் ஆட்சி
பிரதேசத்திற்குள் நுழைந்த கைக்குட்டையினை பார்த்ததும் தனது வேட்கையினை தணித்தது.
திருதிருவென விழித்தவளைப் பார்த்து, "இது என்னோட தம்பி இல்லை.. என்னோட கசின் பரதர்... தீரன்...” என கௌரி அறிமுகம் செய்ய, "ஓ.. ஓகே ஓகே... ஹாய் கசின் பிரதர்..." என அசடாய் முறுவலித்து விட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள் பாவ்யா. தீரனின் கண்களோ அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தது.
தீருமோ?? 🌨️🕯️🕯️
முந்தைய அத்தியாயம் அடுத்த அத்தியாயம்
5 Comments
Semma ka interesting ah iruku. Paavya va illa divya ya va ka remdu name um mention panni irukinga.
ReplyDeleteAdhu typo error check panrappo thappaagiduchu pola maa.. correct pannidaren.. thank you so much maa... keep supporting..
Deleteமிக்க நன்றி அக்கா.. கீப் சப்போர்ட்டிங்..
ReplyDeleteவாவ்.. சூப்பர். கதை கோயிங் கிரேட்.
ReplyDeleteமிக்க நன்றி டியர்... சீக்கிரமா அடுத்த எபிசொட் போஸ்ட் பண்றேன்...
Delete